Advertisment

புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு - மத்திய அமைச்சர் தகவல்!

நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் நாட்டில் சுற்றுச்சூழலின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது புலிகள் எண்ணிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

Advertisment

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கூறுகையில், " கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் நாட்டில் 2 ஆயிரத்து 226 புலிகள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்து 976 ஆக உள்ளது. அதாவது புலிகள் எண்ணிக்கை 750 வரை அதிகரித்துள்ளது" என்றார்.

Advertisment

tiger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe