விவசாயிகளுக்கு உரங்களுக்காக வழங்கப்படும் மானியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள இந்த 20 சதவீத உர மானியத்திற்காக ரூ.28,875 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.