biological e vaccine

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிற்குள்ளேயே தடுப்பூசி உற்பத்தியைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு, தடுப்பூசி தயாரிக்க சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கவுள்ளதாகதெரிவித்தது.

Advertisment

இந்தநிலையில்,ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிகல் - இ நிறுவனத்திடம் இருந்து, 30 கோடி கரோனா தடுப்பூசிகளைப் பெற முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரைபயோலாஜிகல் - இ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தத் தடுப்பூசிகளுக்காக1,500 கோடி ரூபாய் முன்பணமாகவழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும்பயோலாஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி, முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கையான முடிவுகளைக் காட்டியுள்ளதாகவும், தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்குவரலாம்எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயோலாஜிகல் - இ நிறுவனம் தற்போது தயாரித்துவரும் தடுப்பூசி, கோவாக்சினுக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி என்பது குறிபிடத்தக்கது.