ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

03:30 PM Oct 18, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT