Advertisment

சவுபாக்கியா திட்டத்தில் ரூ. 16,320 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது - பியூஷ் கோயல்

bb

2019-20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சவுபாக்கியா திட்டத்தைப் பற்றிப் பேசிய அவர், “நாடுமுழுவதும் உள்ள வீடுகளுக்கு மின்வசதி அளிக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. அதேசமயம் ஏறக்குறைய 2.50 கோடி வீடுகளுக்கு மின்வசதி கிடைக்கவில்லையென அடையாளம் காணப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சவுபாக்கியா திட்டத்தில், இதுவரை வீடுகளுக்கு மின் வசதி அளிப்பதற்காக ரூ. 16,320 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 2 கோடியே 48 இலட்சத்து 19 ஆயிரத்து 168 வீடுகளுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 கோடியே 48 இலட்சத்து 47 ஆயிரத்து 762 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மின் வசதி இல்லாத இந்த வீடுகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisment

budget 2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe