டில்லியில் நடந்த ஆர்ய சமாஜ் நான்கு நாள் மாநாட்டை துவக்கி வைத்துவிட்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ குளிர்கால கால பண்டிகைகள் கொண்டாட வேண்டிய காலம் வந்துவிட்டது, இந்த வேளையில் டில்லி போன்ற நகரங்களிலுள்ள மக்கள் மாசு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மக்களுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக சிறுவர்களுக்கும், பெண்களுக்கும்தான் அதிகாம பாதிக்கப்படுகின்றனர். சுற்றுசூழலை மாசுபடுத்தாமல், அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் பண்டிகைகளை கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சுற்றுசூழல் பாதிப்படவதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி சமூக அமைப்புகளுக்கு வேண்டுகோள் விட்டுள்ளார் ராம்நாத் கோவிந்த.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments