CBI says on state government appeal at Kolkata case

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவ மாணவியின் க்கொடூரக் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் நீதிமன்றம், தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோச்ஜ், காவல் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி தான் என கடந்த 18ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதித்து கடந்த 20ஆம் தேதி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய ஆயுள் தண்டனையை அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு சார்பில் நேற்று (21-01-25) நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Advertisment

இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று (22-01-25) நீதிபதிகள் டெபாங்ஷூபசக் மற்றும் எம்.டி.ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது ஆஜரான சிபிஐ தரப்பு, ‘இந்த வழக்கை தாங்கள் விசாரித்ததால், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கில், வழக்குத் தொடுக்கும் ஏஜென்சிக்கு மட்டுமே மேல்முறையீடு செய்ய அதிகாரம் உள்ளது’ என்று கூறியது.