நாடு முழுவதும் ஊழல், குற்ற வழக்குகள், ஆயுத கடத்தல் ஆகிய குற்றங்கள் தொடர்பான 30 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 110 இடங்களில் சி.பி.ஐ. இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை, லூதியானா, தானே, வல்சாத், புனே, பழனி, கயா, குர்கான், சண்டிகர், போபால், சூரத், கோலார் உள்ளிட்ட பல நகரங்களில் முக்கிய நபர்களின் வீடுகள் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.