Advertisment

மேற்கு வங்கத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து விசாரணை நடத்தும் சிபிஐ!

cbi

Advertisment

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து திரிணாமூல்காங்கிரஸ் - பாஜகவினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதல் வன்முறையாக மாறி சில நாட்கள் தொடர்ந்தது.

இந்த வன்முறையில் 10க்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், வீடுகள் கொளுத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய இந்த வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.இதனைத்தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், தேர்தலுக்குப் பிறகான இந்த வன்முறை குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவொன்று அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, சட்டம் ஒழுங்கை சரியாக கையாளவில்லை என மம்தா தலைமையிலானஅரசைக் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு வன்முறை சம்பவங்களைசிபிஐ விசாரிக்க வேண்டுமெனபரிந்துரை செய்தது.

ஆனால், தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறிய மேற்கு வங்க அரசு, குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்குப் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இருப்பினும் கடந்த 19ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க வன்முறையை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்துதற்போதுநான்கு இணை இயக்குநர்கள், பல டிஐஜிகள் மற்றும் 16 எஸ்.பிக்கள் உள்ளிட்டோர் அடங்கியமிகப்பெரிய சிபிஐ அதிகாரிகள் குழு மேற்கு வங்கத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளசிபிஐ அதிகாரிகள், தாங்களும் நான்கு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளனர்.

ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்ள இத்தனை அதிக சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

Assembly election west bengal CBI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe