Advertisment

ஹத்ராஸ் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ!

cbi

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தன.

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். வழக்கை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்" எனஅறிவித்தது.

Advertisment

இந்தநிலையில், சி.பி.ஐ இந்த வழக்கில்இன்று (18.12.2020) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. அதில்குற்றம் சாட்டப்பட்டநான்கு பேர் மீதும், சி.பி.ஐ கொலை மற்றும் கூட்டுப் பாலியல்வன்கொடுமைசெய்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளது. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும்அந்த நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

uttarpradesh CBI Hathras case
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe