Skip to main content

முன்னாள் சிபிஐ இயக்குனர் வீட்டை நோட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்கள் யார்???

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
car


சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மோதலில் அதிரடி திருப்பமாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. 
 

கட்டாய விடுப்பில் சென்றுள்ள சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் வீட்டை நோட்டமிட்ட நான்கு பேரை கைது டெல்லி போலிஸார் செய்துள்ளனர். இன்று காலை நான்கு மணி அளவில் அலோக் வர்மாவின் வீட்டின் சுற்றுபுற சுவர் அருகில் நான்கு பேர் பதுங்கியுள்ளனர். அவர்களை கண்ட அலோக் வர்மாவின் வீட்டுக் காவலர் அவர்களை பிடித்து வைத்திருந்தார். பின்னர், டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்காக காவல் நிலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
 

கைது செய்யப்பட்ட நான்கு பேரும், சிபிஐ தலைவர் பரிந்துறையில் அலோக் வர்மாவின் வீட்டை புலனாய்வு செய்ய அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநரின் அனுமதியும்; அதிமுகவின் மா.செ கூட்டமும்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

 

அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கூட்டமானது தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் நேற்று அனுமதி அளித்திருந்தார். அது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

 

Next Story

கூட்டு சதி;  நல்லாசிரியர் விருது பெற்றவர் அதிரடி கைது

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

national level best teacher award Award Ramachandran was arrested in a case of income tax fraud

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் வருமான வரி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ராமசந்திரன் பணியாற்றி வருகிறார். சிறப்பாக பணியாற்றியதையடுத்து கடந்த ஆண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் நல்லாசிரியர் விருதும் பெற்றார். இவரது சகோதரர் பஞ்சாட்சரம் டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வேர்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் வருமான வரி தாக்கல் தொடர்பான விபரங்கள் மற்றும் வரி தாக்கல் செய்யும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் பஞ்சாட்சரம் தனது நிறுவனத்தின் மூலம் நிறைய பேருக்கு குறைவான கணக்கு காண்பித்து பணத்தை திரும்பப் பெற்று கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 2.84 கோடி வரை முறைகேடாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்று கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்த வருமான வரித்துறையினர் பஞ்சாட்சரம் மீது சிபிஐயிடம் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ கடந்தாண்டு அவரை கைது செய்தது. . 

 

இதனையடுத்து பஞ்சாட்சரம் தனது சகோதரர் ராமசந்திரனுக்கு தனது வங்கி கணக்கின் மூலம் ரூ.12 லட்சம் அனுப்பப்பட்டதைக் கண்டுபிடித்த சிபிஐ அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது குறித்து ஆசிரியர் ராமசந்திரன்  உரிய விளக்கமளிக்காததால் கூட்டு சதி என்ற பிரிவில் சிபிஐ கைது செய்துள்ளது. இந்த நிலையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமசாந்திரனை பணியிடைநீக்கம் செய்து கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.