Advertisment

தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவு; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

Cauvery Commission orders to release water to Tamil Nadu

Advertisment

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத்திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் இன்று நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத்திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத்திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாகத்தண்ணீரைத்திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம்இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வினாடிக்கு 10ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத்திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

karnataka Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe