Skip to main content

கொடூரமாக எலியைக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு; எலிக்கு பிரேதப் பரிசோதனை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Case registered against man who brutally rat; Post-mortem examination of the rat

 

எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கடித்துக் கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உத்திரப்பிரதேசத்தில் விலங்கு நல ஆர்வலர் விகேந்திர சர்மா என்பவர் மனோஜ் குமார் என்ற இளைஞரின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் மனோஜ் குமார் என்பவர் எலியின் வாலில் கல்லைக்கட்டி அதைக் கழிவுநீர் வாய்க்காலில் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. 

 

மேலும், இது குறித்து விகேந்திர சர்மா கூறுகையில், மனோஜ் குமார் எலியின் வாலில் கல்லைக் கட்டி கழிவுநீர் வாய்க்காலில் மூழ்க வைத்து எடுத்துக்கொண்டு இருந்தார். நான் இதனைக் கண்டு எலியைக் கொடுக்குமாறு கேட்ட பொழுது, அதை அந்த கழிவுநீர் வாய்க்காலில் தூக்கியெறிந்தார். நான் உடனே கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி எலியை வெளியே எடுத்தேன். அப்பொழுது அது உயிருடன் தான் இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் இறந்து விட்டது. 

 

இது மட்டுமின்றி, இதுநாள் வரை அப்படித்தான் செய்து கொண்டு இருந்தேன் என்றும், இனிமேலும் அவ்வாறு தான் செய்யப்போகிறேன் என மனோஜ் குமார் கூறினார் என்று, விகேந்திர சர்மா கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த எலியுடன் காவல்நிலையத்திற்குச் சென்று விகேந்திர சர்மா புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் அலோக் மிஸ்ரா கூறுகையில், “குற்றவாளி கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். எலிகள் விலங்குகள் பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது” எனக் கூறினார்.

 

எனினும், விகேந்திர சர்மா கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் அளித்த பின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலைய வழக்குப் பதிவின் அடிப்படையில் எலியின் பிரேதப் பரிசோதனை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. இது குறித்தான அறிக்கை 4 முதல் 5 நாட்களில் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.