Advertisment

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!! சிபிஐ அதிரடி!!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்ப.சிதம்பரத்துக்கு எதிராக துணைகுற்றப்பத்திரிகைஇன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

aircel

Advertisment

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏர்செல் பங்குகள் மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில்முறைகேடுகள்குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில்உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலாநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் ஜூலை 10-ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம்தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம்தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனை அடுத்து கடந்தஜூலை 10-ஆம்தேதிநடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 -ஆம் தேதிவரை தடை விதித்துள்ளது. மேலும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் கைது செய்ய தடைவிதித்துவழக்கை ஆகஸ்ட் 7 தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டதுபாட்டியாலா நீதிமன்றம்.

ஏற்கனவே கடந்த மாதம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தநிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகையை இன்று சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

Aircel-Maxis P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe