Skip to main content

நெட் தேர்வு தேதி அறிவிப்பு - செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

UGC NET

 

நெட் தேர்வு (NET), அக்டோபர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

மேலும், நெட் தேர்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தைச் செலுத்த அக்டோபர் ஆறாம் தேதி கடைசி நாள் எனவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ugcnet.nta.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட டிசம்பர் 2020 நெட் தேர்வும், ஜூன் 2021-ல் நடைபெற வேண்டிய நெட் தேர்வும் தற்போது ஒன்றாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Publication of guidelines for NEET students!

 

நாளை (17/07/2022) பிற்பகல் 02.00 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும். பிற்பகல் 01.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவுவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. பான்  அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம். மாணவர்கள் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 


தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்.95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம். செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

 

Next Story

நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் நுழைவுத் தேர்வு!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

 

medical admission ug neet exam students

 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு நடக்கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

 

கரோனா காரணமாக, மாணவர்களின் நலன் கருதி நீட் நுழைவுத் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன்முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. 

 

தமிழ்நாட்டில் இருந்து 1,12,889 பேர் உள்பட நாடு முழுவதும் 16 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர்.  தமிழ்நாட்டில் இருந்து 41,144 மாணவர்கள், 71,745 மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் மொத்தம் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழில் தேர்வு எழுதுவதற்காக 12,899 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 11,236 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.