Skip to main content

இலவச தரிசன டிக்கெட் ரத்து; ஒரு நாளுக்கு மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Cancellation of Free Darshan Tickets; Devotees who have been waiting for more than a day


புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் 87 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும் நான்கு கோடியே 5 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 லிருந்து 6 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்