புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் விவாதத்திற்கு பின்பு நிறை வேற்றப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதே சமயம் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை என்.ஆர் காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.