Skip to main content

வீதிகளில் போராடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்... நாடு முழுவதும் ஐசிஏஐ க்கு எதிரான போராட்டம்...

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

ஆடிட்டர் பணிக்கான சி.ஏ தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் வகையில் புதிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என கூறி நாடு முழுவதிலும் சி.ஏ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

ca students protest outside icai office

 

 

கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான போது சரியாக பதிலளித்த மாணவர்கள் பலர், தவறான மதிப்பிடல் காரணமாக தேர்ச்சி பெறாத சூழலுக்கு தள்ளப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் சி.ஏ தேர்வில் மறு மதிப்பீட்டு முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி, தேர்வினை நடத்தும் ஐசிஏஐ அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும், விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் தவறாக மதிப்பெண் அளித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடந்தது. இந்தநிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை அடுத்து வரும் தேர்வுகளின் போது நிறைவேற்றுவதாக ஐசிஏஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற தவறான விடைத்தாள் மதிப்பீட்டால் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .