Skip to main content

கரோனாவுக்குப் பின் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு...

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

c voters poll about modis influence


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 65 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சி-வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 


நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், சிறப்பாகச் செயலாற்றும் முதல்வராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மாநிலம் தோறும் தலா 3,000 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டு சி-வோட்டர் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒடிசாவில் 95.6 சதவீத மக்களும், இமாச்சல பிரதேசத்தில் 93.95% மக்களும், சத்தீஸ்கரில் 92.73% மக்களும் பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர். அதேநேரம் குறைந்தபட்சமாக கேரளாவில் 32.89% மக்களும், தமிழகத்தில் 32.15% மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேசிய அளவில் 0.58 சதவீதம் மக்கள் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர்களின் செயல்பாடுகளைப் பொருத்தவரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல, மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்களின் பட்டியலில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.