உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுமக்களை விட பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மாடுகளை பராமரிக்க அதற்கென ஒரு தொகை ஒதுக்கப்பட்டது, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளுக்கு தனி ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் அம்மாநிலத்தில் பைசிங்பூர் பகுதியில் கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு கம்பிளி வாங்க அந்த மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
முதற்கட்டமாக 13000 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அரசின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களே குளிரில் நடுங்கி சாகும்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.