odissa

சமூகவலைதளங்களில் நன்மை, தீமை இரண்டுமேஉண்டு. அதில்குறிப்பிடத்தக்க நன்மைகளுள் ஒன்று, எவ்வளவு பெரிய ஆளாகஇருந்தாலும், நம்மைஆள்பவராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை நேரடியாகதொடர்புக்கொள்ள முடிவது. அதன்மூலம், பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. அதேபோல் ஒரு சம்பவம்தான் ஒடிசாமாநிலத்தில் நடந்திருக்கிறது.

Advertisment

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரின் மண்டல போக்குவரத்துதுறை, சமீபத்தில் பேருந்களின் நேரஅட்டவணையை மாற்றியமைத்தது. இதனால், மாணவர்ஒருவர் பள்ளிக்குச் செல்லதாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர், ட்விட்டரில் புவனேஸ்வரின் மண்டலபோக்குவரத்து துறையையும், அதன்இயக்குனரையும்டேக்செய்து, ‘நான் பள்ளிக்கு7.30 மணிக்குச் செல்லவேண்டும், ஆனால் எங்கள் வழித்தடத்தில் 7.40 மணிக்குத்தான் முதல் பேருந்தேகிளம்புகிறது.இதனால்பள்ளிக்குத் தாமதமாக செல்கிறேன். இதனால் பல இன்னல்களை சந்திக்கிறேன். இதில்உடனடியாக தலையிட்டுநடவடிக்கை எடுத்தால்மிகவும் நன்றியுடன் இருப்பேன்’ என்றுபதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து புவனேஸ்வர் மண்டலபோக்குவரத்து துறை, அந்த மாணவர்சரியான நேரத்திற்குபள்ளிக்குச் செல்லும் வகையில்பேருந்து நேரத்தையேமாற்றியுள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வர் மண்டலபோக்குவரத்து துறை இயக்குனர் அருண்போத்ரா, ட்விட்டரில் மாணவனுக்குஅளித்துள்ள பதிலில், மாணவன்வசிக்கும் வழித்தடத்தில், முதல் பேருந்து 7 மணியிலிருந்து இயங்கத்தொடங்கும். நீங்கள் இனி பள்ளிக்குதாமதமாக செல்ல மாட்டீர்கள் எனக் கூறியுள்ளார்.

Advertisment

மாணவனின் கோரிக்கையை ஏற்று, பேருந்து நேரத்தை மாற்றிய புவனேஸ்வர் மண்டல போக்குவரத்து துறைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.