Advertisment

கேரளாவில் பேருந்து ஸ்ட்ரைக் அறிவிப்பு!

hjk

Advertisment

கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்துவரும் கேரளாவில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் அம்மாநிலத்தைப் புரட்டிப்போட்டது. பெரிய அளிவில் பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்திய அந்த வெள்ள பாதிப்பு தற்போது முழுவதும் குறைந்துள்ள நிலையில், அம்மாநில போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாநில அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அம்மாநில போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bus Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe