தெலுங்கானாவில் பேருந்து விபத்து - 40 பேர் சம்பவ இடத்திலேயே பலி - படங்கள்

bus

bus 56

bus 34

தெலுங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் குண்டகட்டா மலைபாதையில் இன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 25 பெண்கள் 8 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

accident bus killed telangana
இதையும் படியுங்கள்
Subscribe