கோப்புப்படம்
திருப்பதி அருகே பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பகராபேட்டையில் 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து. விபத்தில் அந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்களில்7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 பேர் உயிரிழந்ததோடு, 40 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்துமீட்புபணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.