ADVERTISEMENT
ADVERTISEMENT
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. இதனையடுத்து பெரும் குழப்பத்துக்கு பின் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாலை சத்தீஸ்கர் ஆளுநர் முன்னிலையில் அவர் முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இன்று மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களான கமல்நாத் மற்றும் அசோக் கெலோட் ஆகியோரும் பதவியேற்றனர்.
Show comments