jkjk

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். அப்பெண்ணின் உடல், தங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு காவல்துறையினரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டதாக, அந்தப் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வர்பொறுப்பில் இருந்து விலகி, ராமர் கோயில் கட்டும் பணிக்குச் செல்லலாம்" என்று மாநில அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment