Advertisment

இளைஞரைக் கொல்ல முயன்ற இந்து அமைப்பினர்! - காப்பாற்றிய காவலர் (வீடியோ)

இஸ்லாமிய இளைஞரை தாக்க முயன்ற இந்து அமைப்பினரிடம் இருந்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி, பலரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

Advertisment

Gagandeep

உத்தர்காண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் உள்ளது கிரிஜா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இந்து கோவிலுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்க்க வந்த இஸ்லாமிய இளைஞருடன் சேர்ந்து அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை அந்தக் கோவிலுக்குள் இருந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென கூட்டமாகக் கூடி அந்த இளைஞரை தாக்கத்தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், இளைஞரைத் தாக்க முயன்ற கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

இருப்பினும் சிலர் கோவில் கதவைப் பூட்டிவிட்டு, அந்த இளைஞரை வெட்டி வீழ்த்த வேண்டும் என கோஷம் எழுப்பத் தொடங்கினர். கும்பலுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம், ‘நீ இந்துப்பெண்.. இஸ்லாமிய இளைஞனிடம் உனக்கென்ன பேச்சு? அவனை இங்கேயே துண்டுகளாக வெட்டி வீசப்போகிறோம். அவனோடு பேசியதற்காக உன்னையும் வெட்டி வீசுவோம்’ என கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்தத் தொடங்கினார்.

அதேபோல், கும்பலிடம் சிக்கிக்கொண்ட இளைஞரை காவல்துறை அதிகாரி ககன்தீப் சிங், கூட்டத்தில் இருந்தவர்கள் தாக்கத் தொடங்கியதும் அவரைக் கட்டியணைத்து தன்னோடு பாதுகாப்பாக இழுத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை உயிருடன் மீட்ட ககன்தீப் சிங் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

hinduthva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe