j

Advertisment

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் பல நவீன வழிகளை கண்டுபிடித்து தொடர்ந்து அந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தாயின் வங்கி கணக்கை பயன்படுத்தி பப்ஜி விளையாடி ரூபாய் 10 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாக மகனிடம் தாய் கேட்டதற்கு, அவருடைய மகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு அந்த சிறுவனை மீட்ட போலீசார், அறிவுரை கூறி பெற்றோரோடு அனுப்பி வைத்தனர்.