Skip to main content

மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே பாய்ந்த குண்டு; இளம் பாடகிக்கு நேர்ந்த அதிர்ச்சி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

A bomb fell while singing on stage; A shock for the young singer

 

பீகாரில் பாடகி ஒருவர் நேரலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த போதே அவர் மீது குண்டு பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பீகார் மாநில நாட்டுப்புற பாடகி நிஷா உபாத்யாய், சரண் மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டு இருந்தார். அந்நிகழ்ச்சியில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது அவரது இடது தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த அவரை உடனடியாக பாட்னா நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

இது குறித்து பேசிய காவல்துறையினர், “நாங்கள் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அப்பகுதிக்கு விரைந்தோம். ஆனால் தற்போது வரை எழுத்துப்பூர்வமாக புகார்கள் எதுவும் பதியப்படவில்லை. துப்பாக்கிச்சூடு எப்படி நடத்தப்பட்டது. அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். 

 

இது குறித்து பேசிய பீகார் மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார், “இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், திருமணங்கள் அல்லது பிற நிகழ்ச்சிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளாகவே இருந்தாலும் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது துப்பாக்கிகளைக் கொண்டு வானத்தை நோக்கி சுடுவது (Celebratory gunfire) குற்றச்செயல் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். மருத்துவமனையில் உள்ள பாடகி உபாத்யாய் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

லாலு பிரசாத்தின் மகன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Lalu Prasad's son admitted to hospital

லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோன்று மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர் ஆவார். இந்நிலையில் நெஞ்சு வலியால் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Case registered against Minister Udayanidhi Stalin

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.