காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் இழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் உண்மை நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி 40 துணை ராணுவத்தினர் கார் குண்டு தாக்குதலில் பலியானதும் இதே இடத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புல்வாமாவில் மீண்டும் குண்டு வெடிப்பு...
Advertisment