Skip to main content

பாடிகார்ட் பவுன்சர்கள் - 'தக் லைஃப்' கொடுக்கும் தக்காளி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

அத்தியாவசியப் பொருட்களின் திடீர் திடீர் விலையேற்றங்களின் பொழுது சில சுவாரசிய சம்பவங்களும் நிகழ்கிறது. அந்த வகையில் அண்மையில் விலையேற்றத்தில் சிக்கியுள்ள தக்காளி சோசியல் மீடியா பாஷையில் சொன்னால் தக் லைஃப்புகளை கொடுத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது வேறு சில மாநிலங்களிலும் தக்காளி விலையேற்றத்தை கண்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் எல்லை மீறி போயுள்ளது தக்காளி விலை. இதனால் கடையின் உரிமையாளர் ஒருவர் இரு பவுன்சர்களை பாதுகாப்பிற்கு நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் பவுன்சர்களை பாதுகாப்பிற்கு நிறுத்திய சம்பவம் என்பது விலையேற்றம் குறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நடத்திய நூதன போராட்டம் என அறிந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேபோல் சோசியல் மீடியாக்களில் தக்காளி தொடர்பான மீம்ஸ்கள் பஞ்சமில்லாமல் பறந்து வருகின்றன. இதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் வெங்காயம் விலையேறி அனலைக் கூட்டியது. எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியாகின. திருமண விழாக்களில் ஒரு கிலோ வெங்காயத்தை மணமக்களுக்கு பரிசளித்து நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்தனர். இப்படி வெங்காய விலையேற்றம் முடிந்த நிலையில் தனது பங்கிற்கு இன்னிங்க்ஸை துவங்கியுள்ளது தக்காளி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேற்று உச்சத்திலே; இன்று குப்பையிலே!

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

bb

 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 200 ரூபாய் என உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த நேரத்தில் இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கும் அளவிற்குச் சென்றது.

 

தொடர்ந்து இது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது தக்காளி விலை மிகச் சரிந்து கிலோ 7 ரூபாய்க்கு விற்பது விவசாயிகளுக்கு வேதனை அளித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் சில விவசாயிகள் தக்காளியைக் குப்பையில் கொட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. அதேபோல் மார்க்கெட் பகுதியிலேயே மாடுகளுக்கு உணவாகக் கொட்டிச் சென்ற நிகழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

அதிரடியாகக் குறைந்த தக்காளியின் விலை; பொதுமக்கள் நிம்மதி

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Drastically low tomato prices The public is relieved

 

தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

 

அண்மையில் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று பெங்களூரு தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 52 ரூபாய் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று தமிழ்நாட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.