ஆற்றில் கவிழ்ந்த படகு... தத்தளித்த முன்னாள் அமைச்சர்கள்... பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்! 

The boat overturned in the river... the former ministers who were shaken... the public was rescued safely!

வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக, பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ரஜிலு என்ற பகுதியில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் படகுகளில் சென்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர்களின் படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. முன்னாள் அமைச்சர்கள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தங்களிடம் இருந்த பாதுகாப்பு கவசங்களை தண்ணீரில் வீசி அனைவரையும் மீட்டனர்.

Andrahpradesh floods
இதையும் படியுங்கள்
Subscribe