Skip to main content

சிறுநீர் கழிக்கபோன சில வினாடிகளில் பிஎம்டபிள்யூ காரை ஆட்டைய போட்ட திருடர்கள்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020


உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் நிஷப் அரோரா. இவர் தன்னுடைய நண்பர் ஒருவருடைய பிஎம்டபிள்யூ காரை கடந்த சில வாரங்களாக தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நண்பர் ஏற்பாடு செய்திருந்த மது விருந்திற்கு காரில் சென்ற அவர் வயிறு முட்ட குடித்துள்ளார். இரவு பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பிய அவர், சாலையில் போகும் போது திடீரென சிறுநீர் வந்ததால், ரோட்டோரமாக வண்டியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். 
 

H



அந்த நேரம் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் காரை திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பொடி நடையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு முதலில் அபராதம் விதித்தனர். மேலும் அவரின் காரை திருடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் யாராவது இந்த செயலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.