ADVERTISEMENT
ADVERTISEMENT
மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார், மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, தண்ணீர் என நினைத்து சானிடைசரை அவர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர், பேசுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமென நினைத்தேன். அங்கு ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டில்களும், சானிடைசரும் இருந்ததால் இதுபோன்று நடந்துவிட்டது. நான் அதைக் குடித்தவுடன் தவறை உணர்ந்துவிட்டேன். எனவே அதனை ஒரேயடியாக விழுங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிகாரியின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாகப் பரவிவருகிறது.
ADVERTISEMENT
Show comments