மும்பைமாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ்பவார், மாநகராட்சியில் பட்ஜெட்தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, தண்ணீர் எனநினைத்து சானிடைசரை அவர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர், பேசுவதற்கு முன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனநினைத்தேன். அங்கு ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டில்களும், சானிடைசரும் இருந்ததால்இதுபோன்றுநடந்துவிட்டது. நான் அதைக் குடித்தவுடன் தவறைஉணர்ந்துவிட்டேன். எனவே அதனைஒரேயடியாக விழுங்கவில்லைஎனக் கூறியுள்ளார்.
அதிகாரியின் கவனக்குறைவால் ஏற்பட்டஇந்தச் சம்பவம்தொடர்பான வீடியோவேகமாகப் பரவிவருகிறது.