Advertisment

"இரட்டை இலக்கத்தைத் தாண்டாது; தாண்டினால்..." - சவால் விடும் பிரசாந்த் கிஷோர்

hjk

மேற்கு வங்க தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டாது என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக தரப்பில் கடந்த இரண்டு நாட்களாக அமித்ஷா தலைமையில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. மேலும் மாநில பாஜகவினர் தொடர் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்கிடையே பாஜக பேரணியில் அதிகப்படியான மக்கள் கூடுகிறார்கள், ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு அதிகம் என்று அம்மாநில ஊடகங்கள் கடந்த இரண்டு தினங்களாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், " பாஜக தேர்தலில் இரட்டை இலக்கத்தைத் தாண்டாது. இரட்டை இலக்கத்தைத் தாண்டினால் நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன். இந்த ட்வீ ட்டை சேமித்து வையுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

mamata banarjee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe