Skip to main content

"பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்..." - பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி எச்சரிக்கை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

 

ரகத

 

பீகாரில் மதுபான விற்பனைக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான விதிமுறைகளை உருவாக்கி மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இருந்தும் அடிக்கடி கள்ளச் சாராயம் குடித்து பொதுமக்கள் பலியாவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 82 பேர் பலியானார்கள். பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.குறிப்பாக 25 பேருக்குக் கண் பார்வை முழுவதும் தெரியாமல் போய் உள்ளது. இந்த கள்ளச்சாராய விற்பனை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தற்போது பரவியுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரத்தை மாநில பாஜக கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி பேசியதாவது, " பீகாரின் மதுவிலக்கு மற்றும் கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தின் படி சரண் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு தர வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக எந்த எல்லைக்கும் போகத்  தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்