hjkhjk

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சாரதா சிட்ஃபண்ட் மோசடி தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் கூறிய கருத்துக்களையும் தற்போது கூறி வரும் கருத்துக்களையும் சேர்த்து பாஜக கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.

Advertisment

சாரதா சிட்ஃபண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த நிலையில் அவர்களை மேற்குவங்க காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு சிபிஐ யை சொந்த லாபத்துக்காக பயன்படுத்துகிறது என கூறி மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் இதே சாரதா சிட்ஃபண்ட் மோசடி தொடர்பாக மம்தா பானர்ஜி அரசை விமர்சித்து வெளியிட்ட பதிவுகளை ஷேர் செய்துள்ளது. காங்கிரஸின் நிலைப்பாட்டை குறித்து அந்த பதிவில் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

Advertisment