birender singh

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில்,மிகப்பெரிய விவசாயத்தலைவராகஇருந்தவர், சர் சோட்டு ராம். இவர் பணக்காரர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதைமுடிவுக்கு கொண்டுவருவதற்காக,பல சட்டங்கள் இயற்றப்படவும்,நடவடிக்கைகள் எடுக்கப்படவும் காரணமாக இருந்தவர். இவரதுபேரன் பிரேந்தர்சிங். இவர் முன்னாள் மத்திய அமைச்சராவர். தற்போது, பாஜகவின்தேசியசெயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

Advertisment

இந்தநிலையில்,பிரேந்தர்சிங்விவசாயிகளுக்கு ஆதரவாகதர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும்விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, டெல்லிஎல்லைக்குச் சென்றுபோராட ஆர்வமாகஇருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து பேசியபிரேந்தர்சிங், “நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். இது இப்போது அனைவரின்போராட்டமாகும். இது சமூகத்தின் ஒரு பிரிவுக்கு மட்டுமானபோராட்டமல்ல. நான் ஏற்கனவே களத்தில் இருக்கிறேன். நான் முடிவு செய்துவிட்டேன். நான் முன் நிற்கவில்லையென்றால், மக்கள் நான் அரசியல் செய்வதாக எண்ணுவார்கள்"எனக் கூறியுள்ளார்.

மேலும், "நீங்கள் யாருடனும் பேசலாம். அவர் ஒரு மாணவராகவோ, பெண்ணாகவோ அல்லது தொழிலாளியாகவோ இருக்கலாம். எல்லோரும் இந்தப் போராட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஒரு தீர்வை விரும்புகிறார்கள். கடந்த 5-6 நாட்கள் மிகவும் குளிராக உள்ளது, ஆனால் அவர்கள் திறந்தவெளியில் உட்கார்ந்திருக்கிறார்கள்" எனவும்பிரேந்தர்சிங்கூறியுள்ளார்.

Advertisment

பாஜகவின்மூத்த தலைவர் அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டெல்லி சென்று விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளஇருப்பதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.