Skip to main content

நடுரோட்டில் போலீஸ் அதிகாரி மீது கொடூர தாக்குதல்... மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் அராஜகம்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

BJP people attacked the police in the rally; The excitement in West Bengal

 

பாஜக கட்சிக் கொடியுடன் அசிஸ்டெண்ட் கமிஷனரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவினரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்து வருவதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி 'நபன்னா அபிஜன்' என்ற பெயரில் பேரணி செல்லப்போவதாக பாஜக சார்பில் திட்டமிடப்பட்டது. நபின்னா அபிஜன் என்றால், ஊழலுக்கு எதிரான போராட்டம் எனும் பொருள்படும்.

 

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, மேற்குவங்க மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். இதற்காக, ஏழு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக 56 லட்சங்கள் செலவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி ஏராளமான பேருந்துகளில் பேரணியில் பங்கேற்பதற்காக வந்தனர். 

 

இத்தனைக்கும், இந்த பேரணிக்கு மேற்கு வங்க அரசு சார்பில், எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாத பாஜகவினர் பேரணியாக செல்வதிலேயே மும்முரமாக இருந்தனர். பேரணி நாளன்று, அனுமதியில்லாத பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது, சோடா பாட்டில்கள், கற்கள் எனக் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

 

கொல்கத்தா அசிஸ்டெண்ட் கமிஷனர் டெப்ஜித் ராய்சவுத்ரி என்பவரை ஓட ஓட விரட்டிய பாஜகவினர், அவர் தடுமாறி கீழே விழுந்த உடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இதில், அவரின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. அதன் X-ray படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரை பாஜகவினர் தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா? எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.