BJP minister caught in controversy

நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடையில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ணை கன்னத்தில் பளாரென அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் அங்கலா என்னும் கிராமத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடகா உள்கட்டுமான மேம்பாட்டுதுறை அமைச்சர் சோமன்னா கலந்து கொண்டார். அப்பொழுது தனக்கு பட்டா வேண்டும் என பெண் ஒருவர் சோமன்னாவின் காலில் விழுந்து கதறி அழுதார். அப்பொழுது கோபமான அமைச்சர் சோமன்னா பளார் என பெண்ணின் கன்னத்தில் அறை விட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.