Skip to main content

கமர்ஷியல் விளம்பரங்களை மிஞ்சும் பாஜக...தேர்தல் விளம்பரத்திற்கு பாஜக செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
bjp


ஐந்து மாநில சட்டசபை தேர்தல் இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது. 
 

இந்நிலையில், இந்தியாவில் யார் ’டிவி சேனல்’களுக்கு அதிக விளம்பரம் கொடுத்துள்ளது என்று பார்க்(BARC)பட்டியல் ஒன்றை வெளியிட்டது.
 

அந்த பட்டியலில், தற்போது மத்தியை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் பாஜகதான் ஒரு கமர்ஷியல் நிறுவனங்களை விட அதிகமாக டிவி சேனல்களில் விளம்பரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. பாஜக, ஐந்து மாநில தேர்தலுக்காக டிவி சேனல்களுக்கு அதிக விளம்பரம் கொடுத்து முதல் இடத்தில் உள்ளது. 22,099 புள்ளிகளில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பார்க் கூறுகையில், ”இந்தியாவில் கடைகோடி வரை அனைவரது வீட்டிலும் டிவி இருப்பதால் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களை கையில் எடுக்க தொடங்கியுள்ளன” என்றார். தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு பாஜகவின் தலைமை ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
 

இந்த பட்டியலில் கமர்ஷியல் நிறுவனங்களை தவிர பாஜக கட்சி மட்டும்தான் இடம் பிடித்துள்ளது, இந்தியாவிலுள்ள வேறு எந்த கட்சியும், குறிப்பாக காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

முன்னதாக ஒரு பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,நான்கரை வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விளம்பரங்களுக்கு என்று ரூ. 5000 கோடி வரை செலவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல 2018 ஆம் ஆண்டில் பாஜக தேர்தலுக்காக ரூ. 2,221.1 கோடி செலவு செய்துள்ளதாகவும் மற்றொரு தகவலில் தெரிவிக்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.