Skip to main content

தெலுங்கானாவில் பாஜக தலைவர் கைது; குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

BJP leader arrested in Telangana; There was a stir because it was carried away like a bomb

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவராக இருப்பவர் பண்டி சஞ்சய். இவருக்கு பாஜக பிரமுகர் பரம் பிரசாந்த் என்பவர் வாட்ஸ்ஆப் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று காலை 9.30 மணிக்கு இந்தி தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பாஜக பிரமுகர் பரம் பிரஷாந்த் என்பவர் கமலாப்பூர் தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாளை புகைப்படம் எடுத்து மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தெலுங்கானா காவல்துறை இவ்விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக மாநிலத் தலைவரை கைது செய்ய வந்துள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் எழவே அவரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்றனர். மாநிலத் தலைவரின் கைதுக்கு பாஜக தொண்டர்கள் பெரும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். இது குறித்து பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 

கடந்த சில தினங்கள் முன் தெலுங்கானா மாநிலத்தில், மாநில பப்ளிக் சர்விஸ் கமிஷன் வினாத்தாள் கசிந்தது. இதற்கு பண்டி சஞ்சய் மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.