BJP executive incident and sell a 7-month-old baby

உத்திர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் 7 மாத குழந்தையை கடத்திய பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சஞ்சய் என்ற 7 மாத குழந்தையை மதுரா ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி காலை 4 மணியளவில் மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்றார். குழந்தை கடத்தப்பட்டதால் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதுராவை பாஜக நிர்வாகி குழந்தையை கடத்தி சென்றுள்ளது தெரிய வந்தது. குழந்தையை கடத்தி குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிக்கு 2 லட்சம் ரூபாய் அளவில் விற்க முயன்றதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பாஜக நிர்வாகி அவரது மனைவி மற்றும் 2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை தனிப்படை காவல் துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

Advertisment