“முறைகேட்டை நிரூபித்துவிட்டால் பொது வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறேன்” - பா.ஜ.க முதல்வர்

 BJP Chief Minister says If prove the malpractice, I will quit public life

அசாம் முதலமைச்சர்மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக்காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள்(வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத்தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமுதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்தவிரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார். மேலும்,நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில், கெளரவ் கோகாய் பதில் அளித்துள்ளார். அதில் அவர், “குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் நான் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் அங்கு சென்றால் அனைத்து ஆவணங்களும் பொது வெளியில் பகிரங்கப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோஇந்திய அரசிடமிருந்து எந்தத் தொகையும் பெறவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு மாறாக ஆதாரங்களை யாராவது வழங்கினால் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவது உட்பட எந்த தண்டனையும் ஏற்கத்தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Assam congress MALPRACTICE
இதையும் படியுங்கள்
Subscribe