Advertisment

'வெள்ளத்தில் பிரியாணியோடு அடித்துச் சென்ற பாத்திரம்!'

'The biryani vessel washed away with biryani in the flood!'

கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடை ஒன்றின் பிரியாணி பாத்திரங்கள் மிதந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள நவாப் சாகிப் பகுதியில் உள்ள அடிபா என்ற உணவகக் கடைக்குள் மழைநீர் புகுந்தது. அங்கு ஒன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரங்கள் வெள்ளத்தில் மிதந்து உணவகத்தில் இருந்து வெளியேறி சாலையில் சென்றன.

Advertisment

இதனை வீடியோவாக ட்விட்டர் பதிவிட்டவர், "பிரியாணி ஆர்டர் செய்த சிலர், இதனை பார்த்தால் சோகமாகிவிடுவர். அதேநேரம், பிரியாணி பாத்திரங்கள் எங்கு சென்று சேர்கிறதோ? அந்த வீட்டுக்காரர் மகிழ்ச்சி அடைவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியாணி என்றாலே நம் நினைவிற்கு வருவது ஹைதராபாத். ஏனென்றால், அந்த நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

hyderabad briyani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe