Skip to main content

"பிரதமர் மோடி கொடுத்தார்னு நினச்சேன்" - வங்கியில் தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் நபர்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

narendra modi

 

பீகார் மாநிலம் ககரியா மாவட்டம் பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கிக் கணக்கில், கிராம வங்கி தவறுதலாக 5.5 லட்ச ரூபாயைத் செலுத்தியுள்ளது. இவ்வாறு தவறுதலாகச் செலுத்தப்பட்ட பணத்தை ரஞ்சித் தாஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தும் விட்டார்.

 

இதனையடுத்து சம்மந்தப்பட்ட வங்கி, தொடர்ந்து ரஞ்சித் தாஸுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் பணத்தைத் திரும்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து அவர் மீது வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம், பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி தனது வங்கியில் செலுத்தப்பட்டதாக நினைத்ததாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணத்தை பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவதாக உறுதியளித்திருந்ததால், இது அதன் முதல் தவணையாக இருக்கலாம் என்று நினைத்தேன். பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் தற்போது பணமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

ரஞ்சித் தாஸிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் சொன்ன காரணத்தை இணையவாசிகள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.