Skip to main content

பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

bihar assembly election thied phase peoples voting

 

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 78 சட்டப்பேரவை தொகுதிகளில் தொடங்கியது.

 

15 மாவட்டங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மாலை 04.00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

 

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 10- ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. கூட்டணி!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

BIHAR ASSEMBLY ELECTION BJP ALIANCE WINS MAJORITY OF SEATS

 

 

பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி.

 

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (10/11/2020) காலை தொடங்கிய நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று (11/11/2020) அதிகாலை வெளியானது.

 

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 125 தொகுதிககளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி: பா.ஜ.க. 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதிகளிலும், விகாஸ்சீல் இஷான் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 

ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி: ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 75, காங்கிரஸ்-19, சி.பி.ஐ. (ML)- 12, சி.பி.ஐ- 2, சி.பி.எம்.- 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

 

தனித்து போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி- 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்- 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

 

Next Story

பீகாரில் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் வாக்காளர்கள்!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

BIHAR ASSEMBLY ELECTIONS SECOND PHASE VOTING

 

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

 

BIHAR ASSEMBLY ELECTIONS SECOND PHASE VOTING

 

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 2.86 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 56 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.