Advertisment

பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. கூட்டணி!

BIHAR ASSEMBLY ELECTION BJP ALIANCE WINS MAJORITY OF SEATS

Advertisment

பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (10/11/2020) காலை தொடங்கிய நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று (11/11/2020) அதிகாலை வெளியானது.

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 125 தொகுதிககளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி: பா.ஜ.க. 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதிகளிலும், விகாஸ்சீல் இஷான் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

லாலுபிரசாத் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி: ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 75, காங்கிரஸ்-19, சி.பி.ஐ. (ML)- 12, சி.பி.ஐ- 2, சி.பி.எம்.- 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தனித்து போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி- 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்- 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

congress bihar assembly election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe