Advertisment

பிபர்ஜாய் புயல்; “ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..” - அமித்ஷா 

Bibarjoy Storm; “Not a single person passes away..” - Amit Shah

அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் கரையை கடந்தது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 140 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. குஜராத்தில் கரையைக் கடந்த பிபர்ஜாய் புயலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அதனைத் தொடர்ந்து புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் பேட்டி அளித்தார்.

Advertisment

அதில் அவர், “பிபர்ஜாய் புயலால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. புயலால் மின்சாரம் இல்லாமல் இருந்த 1,600 கிராமங்களுக்கு மீண்டும் மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சீர் அமைக்கப்படுவருகின்றன. புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண தொகை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மணிப்பூர் கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர்

Amitsha Gujarath manipur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe